Archives: ஜூலை 2017

உங்களுக்கு நற்பெயர் கிடைக்கவில்லையா?

1950-1960களில் ஆட்ரி ஹெப்பர்ன், நட்டாலி வுட் மேலும் தெபோரா ஹெர் என்ற ஹாலிவுட் நடிகைகளின் நிகழ்ச்சிகள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி, பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன. ஆனால், இந்த நடிகைகளின் நிகழ்ச்சிகள் சிறந்து விளங்குவதற்குக் காரணம்; அந்த நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியான இசைக் குழுவினர் இயற்றிய மிக இனிமையான பாடல்கள்தான். அவை அந்த நடிகைகளின் திரைப்படங்கள் வெற்றி பெற உண்மையான காரணமாக இருந்தது. அந்த மூன்று பிரசித்திபெற்ற நடிகைகளுக்காக, திரைக்குப்பின்னால் ஒலி கொடுத்தது மார்னி நிக்சன்தான். ஆனால், அவளது முக்கியமான பங்களிப்பை நீண்ட காலமாக ஒருவரும் கண்டு கொள்ளவுமில்லை, அவளைப் புகழவுமில்லை.

கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் மிக முக்கியமான பணிகளை முன்னின்று செயல்படுத்துபவர்களை, அப்போஸ்தலனாகிய பவுல் தம் ஊழியத்தில் அதிகமாக சார்ந்திருந்தார். ரோமருக்கு எழுதிய நிருபத்தில் வல்லமையோடு தேவ செய்தி வெளிப்பட காரணமாக இருந்தவர் பவுலுடைய எழுத்தர் தெர்தியுவாகும் (ரோம. 16:22). பவுல் அப்போஸ்தலனுக்கும், ஆதித் திருச்சபைக்கும், எப்பாபிராவின் ஊக்கமான ஜெபம்தான் முக்கிய அஸ்திபாரமாக இருந்தது (கொலோ. 4:12-13). களைப்படைந்த பவுல் அப்போஸ்தலன் ஒய்வு எடுத்துக் கொள்ளத்தக்கதாக லீதியாள் அவளது வீட்டை திறந்து கொடுத்தாள். கிறிஸ்துவுக்குள் உடன் ஊழியர்களான இவர்களின் உதவி இல்லாமல் பவுல் திறம்பட உழியம் செய்திருக்க முடியாது (வச. 7-18).

தேவனுடைய ஊழியத் திட்டத்தில் நாம் செய்யும் பணி ஒருவேளை வெளிப்படையாக பிறர் பார்க்கத்தக்கதாக இல்லாவிட்டாலும், நாம் அவருக்கு உண்மையாகக் கீழ்ப்படிந்து அவருடைய ஊழியத்தில் அமைதியாக பங்கெடுக்கும் பொழுது, தேவன் நம்மேல் பிரியமாய் இருக்கிறார் (1 கொரி. 15:58) அவ்வாறு நாம் செய்யும் பொழுது, அந்த ஊழியம் தேவனுக் மகிமையாகவும், பிறரை அவரண்டை வழிநடத்துவதாகவும் இருப்பதால், நமது ஊழியம் அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.

நான் உண்மையிலேயே பயந்தேன்

“நான் உண்மையாகவே பயப்படுகிறேன்” என்று இரக்க உணர்வை தூண்டுகிற ஒரு குறிப்பை பதின் வயதினரான ஒரு பெண் அவளுக்கு நடந்த பரிசோதனையின் முடிவு பற்றி அவளது முக நூலில் பதிவு செய்தாள். அவளது வீட்டிலிருந்து மூன்று மணி நேர பயணத்திற்கு அப்பாலிருந்த ஒரு மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் அவளை பாதித்திருந்த மிக மோசமான வியாதியைப்பற்றி செய்த பல பரிசோதனைகளுக்கான முடிவை எதிர் நோக்கி அவள் கவலையுடன் காத்திருந்தாள். ஒருவேளை மருத்துவமனையில் சேர வேண்டிய சூழ்நிலை வந்துவிடுமோவென்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிற தேவையற்ற நிகழ்வுகள், நமது வாழ்க்கையை அச்சுறுத்தும் பொழுது, வாலிபர்களாக இருந்தாலும் அல்லது வயோதிபவர்களாக இருந்தாலும், யார்தான் பயப்பட மாட்டார்கள்? உதவிக்காக நாம் யாரிடம் போவோம்? இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளில் நமக்கு தைரியத்தை அளிக்க வேத வசனங்கள்மூலமாக நாம் ஆறுதலை பெற முடியும்.

நமது சோதனைகள், துன்பங்கள் மத்தியில் தேவன் நம்மோடு கூட வருகிறார் என்ற உண்மை நமக்கு நம்பிக்கை அளிக்கலாம். “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான்; உனது வலது கையைப்பிடித்து பயப்படாதே, நான் உனக்கு துணை நிற்கிறேன்” என்ற ஏசாயா 41:13 கூறுகிறது.

நாம் நமது கஷ்டங்களை, துன்பங்களை ஜெபத்தின் மூலம் தேவனுக்கு தெரியப்படுத்தும் பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான விவரிக்க இயலாத சமாதானத்தை தேவன் நமக்கு அருளுகிறார் (பிலி. 4:6-7).

நாம் உண்மையிலேயே பயப்படுகிற சூழ்நிலைகளைக் கடந்து வர, தேவனுடைய வாக்கு மாறா பிரசன்னமும், “எல்லாப் புத்திக்கும் மேலான அவரது சமாதானமும்” (வச. 7), நமக்கு அருளப்பட்டு, அப்படிப்பட்ட சூழ்நிலைகளை நாம் நம்பிக்கையுடன் சந்திக்க தேவன் பெலன் அருளுகிறார்.

தந்திரோபாய திசைதிருப்பல்

தேவனை அணிந்து கொள்ளுதல் என்ற புத்தகத்தின் ஆசிரியரான லாரன் வின்னர், நாம் அணிந்துள்ள உடை, நாம் யார் என்பதை அமைதியாக பிறருக்கு அறிவிக்கும் என்று கூறுகிறார். நாம் உடுத்தியிருக்கும் ஆடை, நமது வேலை, நமது சமுதாயம், நமது மனநிலை, நமது உணர்வுகள், மேலும் சமுதாயத்தில் நமது தரம் ஆகியவைகளைக் குறிப்பிட்டுக் அடையாளம் காட்டும். ஒரு விளம்பரத்திற்கான கவர்ச்சி வாசகத்தை உடைய “டீ” ஷர்ட், குறிப்பிட்ட பணிக்குரிய உடை, ஒரு சீருடை அல்லது கிரீஸ் படிந்த ஜீன்ஸ் இவை எவற்றை வெளிப்படுத்துகின்றன என்பதை சிந்தித்துப் பாருங்கள். “ஆடைகளை எப்படியாக ஒருவரது நிலையை அமைதியாக வெளிப்படுத்துகிறதோ அதுபோல, ஒவ்வொரு கிறிஸ்தவனும் வார்த்தைகளே இல்லாமல் அமைதியாக பிறரை ஈர்க்கக் கூடிய முறையில் இயேசுவைப்பற்றிய நற்செய்தியை வெளிப்படுத்த வேண்டும்” என்று லாரன் எழுதியுள்ளார்.
பவுல் அப்போஸ்தலன் கூறுவதுபோல நாமும் வார்த்தைகளினாலன்றி அமைதியாக இயேசுவை வெளிக்காட்டுபவர்களாக இருக்கலாம். “துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேனாமல் இருந்து கர்த்தராகிய இயேசுவை தரித்து கொள்ளுங்கள்” என்று ரோமர் 13:14 கூறுகிறது. அதன் அர்த்தம் என்ன? நாம் கிறிஸ்தவர்களாகும் பொழுது, கிறிஸ்துவின் அடையாளத்தைப் பெறுகிறோம். “விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறோம்” (கலா. 3:26,27) அதுதான் நமது நிலைமை. ஆகிலும் ஒவ்வொருநாளும் நாம் அவரது குணங்களை தரித்துக்கொள்ள வேண்டும். இயேசுவைப் போல வாழ நாம் முயற்சி எடுத்து அவரை அறிகிற அறிவிலும், கீழ்ப்படிதலிலும் வளர்ந்து நம்மை ஒரு காலத்தில் அடிமைப்படுத்தியிருந்த பாவத்தை விட்டுத் திரும்ப வேண்டும்.

நமக்குள் கிரியை செய்கிற பரிசுத்த ஆவியினால், தேவனுடைய வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதாலும், ஜெபத்தாலும், பிற விசுவாசிகளோடு ஐக்கியம் கொள்ளுவதாலும், கிறிஸ்துவுக்குள் நாம் வளர முடிகிறது (யோவா. 14:26). பிறர் நமது வார்த்தைகளையும், செயல்களையும் கவனிக்கும் பொழுது கிறிஸ்துவைப் பற்றி நாம் என்ன கூறுகிறோம்?

அனைத்திற்கும் ஒரு காலம்

சமீபகாலத்தில் நான் விமானப் பயணத்தை மேற்கொண்டபொழுது நான் இருந்த வரிசைக்கு சில வரிசைகளுக்கு முன்பாக, குழந்தைகளுடன் அமர்ந்திருந்த ஒரு தாயாரைப் பார்த்தேன். தளிர் நடை நடக்கும் சிறுவன் மன திருப்தியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். தாயோ அண்மையில் பிறந்த அவளது குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்து, அதன் கண்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தை ஆச்சரியம் நிறைந்த கண்களால் தன் தாயாரைப் பார்த்தது. அந்தக் காட்சியைக் கண்ட நான் கடந்த காலத்தில் அந்தப் பருவத்திலிருந்த எனது குழந்தைகளை எண்ணிப் பார்த்து எவ்வளவாக காலம் கடந்து விட்டது என்பது பற்றி சற்று ஏக்கத்துடன் கூடிய மகிழ்ச்சியடைந்தேன்.

பிரசங்கி புத்தகத்தில் சாலொமோன் ராஜா கூறிய வார்த்தைகளை எண்ணிப்பார்த்தேன். “வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு சமயம் உண்டு” (வச. 1). அதைத் தொடர்ந்து பல எதிர் மறைக் காரியங்களைக் கூறி “ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு சமயம் உண்டு” என்று கூறியுள்ளார். “பிறக்க ஒருகாலமுண்டு; இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு” என்று எழுதியுள்ளார் (வச. 2). சாலொமோன் ராஜா, இவ்வுலகில் நடக்கும் அனைத்துக் காரியங்களையும் கண்டு இவ்வுலக வாழ்க்கை அர்த்தமற்றது என்று கருதி, அவரது நம்பிக்கையற்ற நிலைமையை ஒருவேளை இவ்வசனங்களில் விளக்கியிருக்கலாம். “அன்றியும் மனுஷர் யாவரும் புசித்து, குடித்து தங்கள் சகல பிரயாசத்தின் பலனையும் அனுபவிப்பது, தேவனுடைய அனுக்கிரகம். தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்” (வச. 13,14) என்று கூறி ஒவ்வொரு சமயத்திலும் தேவன் இடைபடுவதை அறிக்கை செய்துள்ளார்.

எனது பிள்ளைகள் குழந்தைகளாக இருந்ததை நான் ஏக்கத்துடன் நினைத்துப் பார்த்ததுபோல நாம் அனைவருமே நம் வாழ்க்கையில் கடந்து சென்ற சில நிகழ்ச்சிகளை ஏக்கத்துடன் நினைவு கூருவோம். நமது வாழ்க்கையின் எந்த காலக்கட்டத்திலும் கர்த்தர் நம்முடன் கூட இருப்பதாக வாக்குப்பண்ணியுள்ளார் (ஏசா. 41;10). நமது வாழ்க்கையின் நோக்கம் அவரது பிரசன்னத்தை உணர்ந்தவர்களாக அவரோடு சேர்ந்து நடப்பதாகும்.